/

திருப்பதியில் இரண்டு நாட்களில் உண்டியல் காணிக்கை ரூ.3.30 கோடி வசூல்

திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை இரண்டூ நாட்களில் ரூ.3.30கோடி வசூலானது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:45 pm

சி. சுரேஷ்குமார்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் உண்டியல் காணிக்கை இரண்டூ நாட்களில் ரூ.3.30கோடி வசூலானது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும் போது உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கையை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தேவஸ்தானம் பாராக்காமணி பிரிவு அதிகாரிகள் மூலம் அன்றன்றே கணக்கிட்டு வங்கியில் வரவு வைத்து வருகிறது.

அதன்படி திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியல் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.30கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.