நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வழக்குகள் வழங்க உச்ச நீதிமன்றம் தடை

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், விசாரணை செய்வதற்காக வழக்குகள் ஏதும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:32 pm

PTI

கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றி வரும் நீதிபதி சி.எஸ்.கர்ணன், விசாரணை செய்வதற்காக வழக்குகள் ஏதும் வழங்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் தனி செயலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதனிடையே, நீதிபதி கர்ணனை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு பணியிடம் மாற்றம் செய்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த ஆணையை நீதிபதி கர்ணனே தடை செய்து இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பணியிட மாறுதல் குறித்து ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி விளக்கம் அளிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கனம் நீதிபதி அவர்களே எனது நீதிமன்ற பணிகளில் தலையிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு குறித்து மூத்த வழக்குரைஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.