குரு சிம்மராசியில் இருக்கும் போது மகம் நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி வரும் நாள் மகாமகம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2004ம் அண்டு மகாமக விழா நடைபெற்றது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மகாமகம் விழா கொண்டாடப்படுகிறது. தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை தொடங்கிய மகாமகப் பெருவிழாவில் முதல்நாளில் ஏராளமான பொதுமக்கள் நீராடினர். வழக்கமாக, 6 சிவக் கோயில்களில் கொடியேற்றியப் பின்னர்தான் பக்தர்களும், பொதுமக்களும் நீராடுவது வழக்கம். ஆனால், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் கூட்டத்தை கணிசமாகக் குறைத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மக்கள் நீராட அனுமதிக்கப்பட்டனர்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகாகமப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கி இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி 22-ம் தேதி நடைபெறுகிறது.
மகாமகக் குளத்திலுள்ள காவிரி தீர்த்தம், வாயு தீர்த்தம்,ஜடாயு தீர்த்தம் என 20 தீர்த்தங்களுக்கும் சென்று பொதுமக்கள் நீராடினர். பொதுமக்கள் வசதிக்காக குவளைகளும், வாளிகளும் விற்பனை செய்யப்பட்டன. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் அனைத்துத் தீர்த்தங்களிலும் நீராடினர்.
பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பதற்காக குளத்தின் பல்வேறு இடங்களில் நீர்த் தெளிப்பான்கள் வைக்கப்பட்டிருந்தது.
6 மகாமகம் கண்ட பாட்டி: தான் ஏற்கெனவே 6 மகாமகத்தைக் கண்டு புனித நீராடினாலும், 7வது முறையாக தற்போது மகாமகக் குளத்தில் நீராடியது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் கும்பகோணம் டபீர்புதுத் தெருவைச் சேர்ந்த வி. விசாலம் (85).
அப்போதெல்லாம் இதுபோன்ற வசதிகள் கிடையாது, மாட்டு வண்டிக் கட்டிக் கொண்டும், கும்பகோணத்தைச் சுற்றியுள்ளபகுதிகளிலிருந்து நடந்து வந்தே நீராடிச் செல்வார்கள். ஆனால், தற்போதைய மகாமகப் பெருவிழாவுக்காக சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிóன்றன.
புண்ணியத் தீர்த்தங்களைக் கொண்ட புன்னியத் தலமான கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மகாமகப் பெருவிழாவில் நீராடியது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த குளத்தில் நீராடியவர்கள் பெரும் பலனை அடைவார்கள் என்றார் விசாலம்.
கூட்டம் இல்லாத போதே நீராடுவது மகிழ்ச்சி: தீர்த்தவாரி நடைபெறும் பிப்ரவரி 22-ம் தேதி மகாமகக் குளத்தில் நீராடுவது என்பது இயலாத காரியம். இதனால் மகாமக விழா தொடங்கிய முதல் நாளில் கூட்டம் இல்லாத போதே நீராடவேண்டும் என்று கருதி வந்தோம். 20 தீர்த்தங்களிலும் நீராடி புண்ணியம் பெற்ற என்ற எண்ணத்தோடு செல்கிறோம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நாராயணன்.
பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகளை அழைத்துக் கொண்டு முதல் நாளிலேயே நீராடினோம். நல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று நீராடிய பொதுமக்கள் பலரும் மகிழ்வுடன் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


