ரயில் தடம்புரண்ட சம்பவம்: நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525), வேலூா் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோமநயக்கன்பட்டி-தச்சூர் என்ற இடத்தில் இன்று காலை 4.15 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த பயணிகள் பேருந்துகள் மூலம் பெங்களூரு அனுப்பி வக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டு மிகப்பெரிய விபத்து நேரிட்டும், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...