இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என 'ஸ்கைப்' மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, போலீஸார் திருமணத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.
இராமநாதபுரம் அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று (நவ. 15) ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
தேவாலய நிர்வாகத்தினருக்கும், திருமண வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் எம். ஜேசு, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார்.
வழக்கின் அவரசநிலையை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால், நிர்வாக நீதிபதியான ராமசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த நீதிபதி எஸ் வைத்தியநாதனை 'ஸ்கைப்' மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
சென்னையில் தன்னுடைய வீட்டிலிருந்தபடியே மைரோசாஃட்டின் விடியோ சாட்டிங் இணையதள சேவையான 'ஸ்கைப்' வழியே விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். எனினும், ஆலயத்துக்கு வெளியே எவ்வித ஊர்வலமும் நடத்தகூடாது என்றார்.
முன்னதாக வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, இ-மெயில் மூலம் நீதிபதிக்கு அனைப்பி வைக்கப்பட்டன.
நீதிபதியின் தீர்ப்பு குறித்த தகவல்கள் இராமநாதபுரம் காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு இ-மெயில் செய்யப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 'ஸ்கைப்' மூலம் நடைபெற்ற முதல் விசாரணை இதுவே என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


