வத்திராயிருப்பு பகுதியில் குதிரைவாலி விதைப்பண்ணை தவிர்த்து, இம்மாவட்டத்தில் மொத்தம் 900 ஹெக்டேரில் மானாவாரியில் பயிரிட்டதில் எதிர்பார்த்ததை விட சாகுபடி கிடைத்தது. இதில், விதைப்பண்ணையத்தில் சாகுபடி செய்ததில் தரமான குதிரைவாலி விதை கிடைத்ததால் வேளாண்மை விதை ஆய்வு மையம் மூலம் சுத்தகரிப்பு செய்து, தமிழகத்தில் அனைத்து வேளாண்மை விதை மையத்திற்கும் விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஏறகனவே இம்மாவட்டப் பகுதியில் குதிரைவாலி சாகுபடி செய்யும் பரப்பளவும் கடந்த 2012-13ல் 850 ஹேக்டேரும், 2013-14ல் 900 ஹெக்டேரும் மற்றும் 2014-15ல் 1800 ஹெக்டேராகவும் அதிகரிக்க உள்ளது.