மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விவசாயியின் வயல்வெளியில் 7100 கிலோ மக்காச்சோளம் விற்பனை    

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை

News image
Updated On :2 மார்ச் 2015, 10:25 am

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை விவசாயிக்கு வழங்கப்பட்டது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக, விவசாயிகள் ஆர்வலர் குழுவினரால் எம்.களத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை விவசாயி கே.குமார் தன்னுடைய நிலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த 7100 கிலோ மக்காச்சோளத்தை வயல்வெளியிலேயே வளையப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி செந்தில்குமாருக்கு விற்பனை செய்தார்.

கிலோ ரூ.12-க்கு என்ற அளவில் விற்பனையான மக்காச்சோளத்துக்குரிய தொகையான ரூ. 85,200 உடனடியாக வழங்கப்பட்டது.இந்த நேரடி வியாபாரி -விவசாயி விற்பனை பரிமாற்றத்துக்கு வேளாண் வணிகத் துறையின் வேளாண் உதவி அலுவலர் தொட்டியம் சரவணக்குமார்,முசிறி வேளாண்மை அலுவலர் புஷ்பாசிவகுமார், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எம்.களத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட விவசாயிகள் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு, குழு மூலம் முதன்முறையாக வயல்வெளியில் நேரடியாக மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டுள்ளது நல்ல பலனைத் தந்துள்ளது என்று திருச்சி வேளாண் வணிகத்  துணை இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.