எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விவசாயிகள் தரமான விதைகளை பார்த்து வாங்க விதை ஆய்வுத்துறையினர் வலியுறுத்தல்

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:06 am

எஸ். பாண்டியன்

விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பருத்தி சாகுபடி செய்வதற்கு தரமான விதைகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை தவிர்த்து மளிகை கடையிலோ அல்லது வீட்டிற்கு கொண்டு வரும் விதைகளையோ எக்காரணம் கொண்டும் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.

எனவே இதை தவிர்க்கும் வகையில் விதை விற்பனை நிலையங்களுக்கு சென்று விற்பனை பட்டியலை கேட்டு பெற வேண்டும். அதில், விதை குவியல் எண், காலவதிநாள், விதை உரிம எண், விதை உற்பத்தி மைய விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அதேபோல், விதை பையில் பொறுத்தப்பட்டுள்ள அட்டையில் காலவதி நாள், எந்த பருவத்திற்கு ஏற்றது என்கிற விவரங்களையும் சார்பார்த்து வாங்குவதுதான் நல்லது. குறிப்பாக மூடையில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக் கூடாது. எனவே போலி விதைகளை யாரவது விற்பனை செய்வதை அறிந்தால் உடனடியாக விதை ஆய்வு மைய துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.