நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கி, திட்டப் பணிகளுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. உலக அளவில் 5-ஆவது நியூட்ரினோ ஆய்வுத் திட்டமாக, இந்திய அணுசக்தி, அறிவியல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து ஐ.என்.ஓ.,(ஐய்க்ண்ஹய்-க்ஷஹள்ங்க் சங்ன்ற்ழ்ண்ய்ர் ஞக்ஷள்ங்ழ்ஸ்ஹற்ர்ழ்ஹ்)அமைப்பு மூலம் செயல்படும் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு, முதலில் நீலகிரி மாவட்டம், சிங்காரா மலைப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. மத்திய சுற்றுச் சூழல், தமிழக வனத் துறை, கிராம மக்களின் ஆட்சேபணையால் இந்த இடம் நிராகரிக்கப்பட்டது.