தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வடகிழக்குப் பருவ மழை சராசரியை விட 53 சதவீதம் அதிகம்: ரமணன்

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சராசரியைவிட 53 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

News image
Updated On :31 டிசம்பர் 2015, 12:26 pm

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை சராசரியைவிட 53 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறினார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி:

வடகிழக்கு பருவ மழையின் போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால், நிகழ் ஆண்டில் மழை 68 செ.மீ. பதிவாகியுள்ளது. இது சராசரியைவிட 53 சதவீதம் அதிகமாகும்.

கடந்த 2013 ஆம் ஆண்டில் சராசரியைவிட 33 சதவீதம் அளவுக்கு குறைவான மழையே பெய்தது. இதைத்தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கன மழை பெய்த போதும், அதைத்தொடர்ந்து மழை ஏதும் இல்லை. ஆனால், 2015 ஆம் ஆண்டில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பெய்த மழைக்கு ஈடாக தற்போது மழை பெய்துள்ளது.

மாநிலத்திலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக மழை பதிவாதியுள்ளது. இந்த ஆண்டு 181.5 செ.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 64 சதவீதம் அதிகமாகும்.

திருவள்ளூர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 59 செ.மீ. ஆக இருக்கும் நிலையில் நிகழ் ஆண்டில் 146 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரையில், சராசரியைவிட 104 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழை அளவு 79 செ.மீ. இருக்கும் நிலையில் தற்போது 160 செ.மீ. மழை பெய்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உருவான எல் நினோ மற்றும் அசாதரண பருவநிலை காரணமாக இந்த ஆண்டு கன மழை பெய்துள்ளது.

மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வரும் நாள்களில் மழை இல்லாவிட்டால், வடகிழக்குப் பருவமழை நின்றுவிட்டது என கருதலாம் என்றார் ரமணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.