தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாயிடமே குழந்தையை ஒப்படைக்க மாமியாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது.

Updated On :26 டிசம்பர் 2015, 1:26 pm

முதல் திருமணத்தின் போது பிறந்த குழந்தையை அதன் தாயிடமே ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டது.

நாகப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சுபா. இவருக்குமே மேனன் பாபு என்பவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு காவ்யஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேனன் பாபு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சுபா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

சில நாள்களுக்குப் பிறகு, அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சுபா, சுசீந்திரன் என்பவரை மறு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய காவ்யஸ்ரீயை, மேனன் பாபுவின் தாய் காளியம்மாள் கடத்திச் சென்றுவிட்டார். தன் மகனுக்குப் பிறந்த குழந்தை தன்னுடன்தான் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

குழந்தை காவ்யாஸ்ரீ, கடத்தப்பட்டது குறித்து சுபா, போலீஸில் புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர், குழந்தையின் உண்மையான பாதுகாவலர் அவரது தாயே. எனவே, காளியம்மாள் குழந்தை காவியஸ்ரீயை அவரது தாய் சுபாவிடம் உடனே ஒப்படைக்க உத்தரவிட்டனர். மேலும், குழந்தையை ஒப்படைப்பதற்கு தேவையான உதவியை செய்யுமாறு நாகப்பட்டிணம் போலீஸாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.