நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பெப்சி நிறுவனத்துக்கு தாமிரவருணி நீர்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் அமையவிருக்கும் பெப்சி ஆலைக்கு தாமிரவருணி ஆற்றிலிருந்து குறைந்த விலையில் நீர் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.

Updated On :15 டிசம்பர் 2015, 4:23 pm

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் அமையவிருக்கும் பெப்சி ஆலைக்கு தாமிரவருணி ஆற்றிலிருந்து குறைந்த விலையில் நீர் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டது.

திமுகவைச் சேர்ந்த சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மு.அப்பாவு இந்த வழக்கை தாக்கல் செய்தார்.

தாமிரவருணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள 20 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நகர்கள் மற்றும் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமையவிருக்கும் பிரதிஷா பிசினஸ் சொலுசன்ஸ் பிரைவேட் லிமிடெட் (பெப்சி சாப்ட் டிரிங் சொலுசன் பிரைவேட் லிமிடெட்) என்ற நிறுவனத்துக்கு, தாமிரவருணி நதியிலிருந்து  37.50 ரூபாய்க்கு ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கு தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தத்தால் ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும் என, ராதாபுரம் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அப்பாவு, சிப்காட் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்.

அந்த மனு மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் இதுகுறித்து பதில் அளிக்குமாறு தமிழக அரசின் முதன்மை செயலர், பொதுப் பணித்துறை செயலர், சிப்காட் நிறுவனத்தின் மேலான்மை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.