டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சென்னை வெள்ளம்: ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள்

சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:44 am

PTI

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையால், வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை.

அப்போது மீட்பு பணியிலிருந்த இந்திய விமானப்படையின் 'சீட்டா' என்ற ஹெலிகாப்டர் மூலம் டிசம்பர் 2 ஆம் தேதி மீட்கப்பட்ட தீப்தி முதலில் தாம்பரம் விமான மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மேலும், மழை வெள்ளத்தால் அவரது மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இதையடுத்து அவர் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் கணினியில் இருந்த ஆவணங்கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருநாள்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

தீப்தி விமானப்படையினார் மீட்கப்பட்டபோது அவரது கணவர் கார்த்திக் பணி நிமித்தமாக பெங்களூரூ சென்றிருந்தார்.

எங்களுக்கு பிறந்துள்ள இரட்டை தேவதைகளை கண்ட போது, எங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் மறந்துவிட்டோம். இப்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிய இந்திய விமானப்படை அதிகாரிகள் அனைவருக்கும் உரிய நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

தீப்தி தவிர, மேலும் மூன்று கர்ப்பிணி பெண்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். கிண்டி அருகேயுள்ள மெடும்பாக்கத்திலிருந்து சுகன்யா (29) என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் தனது 3 வயது மகனுடன் மீட்கப்பட்டார்.

எங்களது அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளம் வரை தண்ணீர் வந்துவிட்டால் நாங்கள் நான்காவது மாடிக்கு குடிப்பெயர்ந்தோம். விமானப் படையினர் எங்களை மீட்கும் வரை, எங்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை என்றார் சுகன்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.