வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணை இயக்குநரால்(கைவினைஞர் பயிற்சி) இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்காலியிடத்திற்கு தகுதியுடைய பதிவுதாரர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு மற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு பட்டயம் பெற்று பதிவு செய்திருப்பது அவசியம் ஆகும். இதில், மெக்கானிக்கல் என்ஜினியரிங், கணிப்பொறி தொழில்நுட்பம், கேட்டரிங் டெக்னாலஜி, ஆட்டோமொபைல் என்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெரைன் என்ஜினியரிங், டூல் அண்ட் மை மேக் என்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் என்ஜினியரிங், பேஷன் டெக்னாலாஜி, எம்ராயட்ரி நீடில் ஆர்ட் ஆகிய பிரிவுகளில் பட்டயம் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.