கருப்புப் பணம்: அரசின் நிலையும் சட்ட முறையும்
கருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியலை வெளியிடாத மத்திய அரசை அக்டோபர் 28-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விளாசித்தள்ளிய விதம், நூறு சவுக்கடி அல்லது நூறு வெங்காயம் சாப்பிடுவது எனும் ஏதாவதொரு தண்டனையைப் பெற வேண்டிய நபர், இரண்டையும் ஏற்க நேரிட்ட கதையாக இருக்கிறது.










