வட்டாட்சியர் சிவஜோதி பேசுகையில், கிராமங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணங்களாலும், சமூக பாதுகாப்பு கருதியே பெற்றோர்கள் குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில் சிறுமிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இதுபோன்று திருமணங்கள் நடத்தப்படுவது தெரிந்தால் உடனே வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும். அதோடு, சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கவும் வேண்டும் என்றார்.