கரூர் வாங்கல் அருகே உள்ள நன்னியூர்புதூர் ஊராட்சியில் கோவில்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே காவரி ஆற்றில் உள்ள மணல்குவாரியில் இருந்து லாரிகள் மூலம் மணல் கேரளா, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இந்த கிராமத்தின் வழியே செல்வதால் கிராமச் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டதாம். லாரிகள் செல்லும் போது அவற்றில் இருந்து கிளம்பும் தூசிகள் வீட்டுக்குள் இருக்கும் பொருட்கள் மீது படிகிறதாம். சாலையின் குறுக்கேச் செல்லும் பைப் லைன்களும் உடைந்துவிடுகிறதாம். மேலும் வயதான முதியோர்கள், பள்ளிக்குழந்தைகள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. தொடந்து விபத்துகளும் நடந்து வந்துள்ளது.