அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம்: 600 பேர் கைது

விருதுநகரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:08 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 550 பெண்கள் உள்பட 600 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கதத்தின் மாவட்ட தலைவர் முனியசாமி,அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அங்கம்மாள் ஆகியோர் தலைமை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்புக்காளை,அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகனவள்ளித்தாயார் ஆகியோர்சாலை மறியல் போராட்டம் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லியாகத் அலி, சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எம்.அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட பொருளாளர் பாத்திமாமேரி நன்றி கூறினார்.

இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும், உணவு செலவு மானியத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தி வழங்குதல்,சத்துணவு திட்டத்தில் புதிய நியமனத்தின் போது 50 சதவீதம் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில்  உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீஸார் 50 ஆண்கள் உள்பட 600 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் 4 வழிச்சாலையில் அரை மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.