என்னென்ன தேவை? குற்றாலம் பகுதியில் இயற்கை அழகுமிக்க இடங்களில் மரங்களை அழித்து தனியார் விடுதிகள் அமைப்பது பெருகி வருகிறது. இதனால் இயற்கை வனப்பு அழிவதுடன், மழைவளமும் குறைகிறது. இதற்கு கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதுடன், மரங்களை வெட்டவும் தடை விதிக்க வேண்டும். மாறாக, அதிக அளவில் மரங்களை நடுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் புகழ்பெற்ற ஏராளமான கோயில்கள் உள்ளன. குற்றாலம் குற்றாலநாதர் கோயில், சித்திரசபை, புளியரை தெட்சிணாமூர்த்தி, தென்காசி காசிவிசுவநாதர் கோயில், கடையநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், திருமலைக்கோவில், ஆய்க்குடி பாலசுப்பிரமணியசுவாமி கோயில், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயில் ஆகிய கோயில்களை இணைத்து ஆன்மிகச் சுற்றுலாவுக்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.