நிராகரிக்கப்பட்ட தமிழன்...
ஓரு காலத்தில் அந்த அழுக்கேறிய திரைகளுக்குள் வந்து போன உருவங்களில் வெறுமனே ஒளி பிம்பங்கள் மட்டுமா இருந்தன? எவ்வளவு கனவு? எவ்வளவு ஆசை? எவ்வளவு சந்தோஷம்? எவ்வளவு வியப்பு? எவ்வளவு விடுதலை? எத்தனை காதல்? எளிய மனிதர்களின் வாழ்க்கையல்லவா அந்த ஒளி வெள்ளத்தில் சுருள் சுருளாகச் சுற்றிக்கொண்டு இருந்தது.










