திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காடானது விளைநிலங்கள்: வாழ்வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் விவசாயிகள்

கடலூர் மாவட்டத்தில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வராமல் மத்திய நிபுணர் குழுவும் புறக்கணித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:49 am

கே.விஜயபாஸ்கா்

கடலூர் மாவட்டத்தில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வராமல் மத்திய நிபுணர் குழுவும் புறக்கணித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் கண்ணீர் வடிக்கின்றனர்.

÷கடலூர் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பு 5 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கர். மாவட்டத்தில் மொத்தம் 2.22 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் டெல்டா பகுதியான சிதம்பரம் வட்டத்தில் மட்டும் 1.16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

÷கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரவில்லை. மேலும் மழை குறைவால் அனைத்து ஆறு, குளம், கண்மாய்கள் வறண்டு விட்டன.

÷இதனால் நெல் சாகுபடி பரப்பு 30 ஆயிரம் ஏக்கராக குறைந்தது. நிலத்தடி நீரை நம்பி நெல் பயிரிட்ட விவசாயிகளும் தண்ணீர் பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு போன்றவற்றால் பெரும் இழப்புக்கு ஆளாகினர். இதனால் விவசாயிகள் வறுமையில் வாடி கடனில் சிக்கி பரிதவித்து வருகின்றனர்.

÷இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய 7 வருவாய் வட்டங்களில் விவசாயம், தோட்டகலை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

÷இதில் டெல்டா பகுதியான சிதம்பரம் வருவாய் வட்டத்துக்கு மட்டும் வறட்சி பாதிப்பு உள்ளதாக, முதல்வர் அறிவித்த ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கும் திட்டத்தில் 8,554 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

÷இதிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் 25 சதவீதம் பேருக்கு கூட நிவாரணம் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

÷மற்ற 6 வருவாய் வட்டங்களில் விளைச்சல் பாதிப்பு 50 சதவீத அளவுக்கு குறைவாக இருப்பதாக அரசுக்கு அறிக்கை அனுப்பியதால், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் குழுவும், அண்மையில் ஆய்வு மேற்கொண்ட நிபுணர் குழுவும் கடலூர் மாவட்டத்துக்கு வரவில்லை.

÷வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறைகளின் மெத்தனமே அரசின் கவனத்துக்கு வறட்சி நிலவரம் சென்று சேராததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

÷அதிகாரிகளிடம் கேட்டால் "சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் 50 சதவீதத்துக்கு மேல் விளைச்சல் பாதிப்பு இருந்தால் மட்டுமே கணக்கெடுப்போம். மாவட்டத்தில் விவசாயிகள் வறட்சியால் சாகுபடியை நிறுத்தி விட்டனர். இதனால் பாதிப்பில்லை என காரணம்' கூறுகின்றனர்.

÷விவசாயிகள் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், "பல விவசாயிகள், நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலையில், பிழைப்புக்காக ஹோட்டல்களிலும், கட்டடப் பணிகளிலும் தொழிலாளிகளாக ஈடுபட்டுள்ளனர்.

÷வறட்சி நிலவரம் குறித்து அதிகாரிகள் முறையாக கணக்கெடுக்கவில்லை. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருவாய்த் துறை, விவசாய, தோட்டக்கலைத் துறைகளிடம் மனு கொடுத்துள்ளனர்.

÷இந்த மனுக்கள் மீது முதல் கட்ட விசாரணை நடத்தக் கூட அதிகாரிகள் முன்வரவில்லை. அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்தி, விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தராவிட்டால், விவசாயிகளை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.

÷இது குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வறட்சி பாதிப்பு குறித்த விவரங்களை நாங்கள் வெளியிட முடியாது. மத்திய குழு தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மட்டுமே சென்று பாதிப்பை ஆய்வு செய்துள்ளது.

÷எனவே கடலூர் மாவட்டத்துக்கு வரவில்லை' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.