புறக்கணிக்கப்படும் காவிரி டெல்டா கடைமடைப் பகுதி
தமிழக அரசின் வெள்ளம் மற்றும் வறட்சி குறித்த ஆய்வு மற்றும் நிவாரணம், சலுகைகள் உள்ளிட்டவை வழங்குவதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள காவிரி டெல்டா கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்படுவதால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளனர்.









