மதுரையை அடுத்த உறங்கான்பட்டியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள சிறுதொழில் கூடங்களில் 30 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. "பிளாஸ்டிக், ரப்பர், மருந்து, உணவு பதனிடல், ஆயத்த ஆடை உள்ளிட்ட 12 வகைத் தொழில்கள் சார்ந்த சிறுதொழில் கூடங்கள் உள்ளன. நாளொன்றுக்கு 3 மணி நேரம் என அறிவித்து மின்தடை ஏற்பட்ட காலம் மாறி, நினைத்த நேரத்துக்கு மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. மின் கட்டணத்தை உயர்த்திய நிலையில், மின் விநியோகம் சீராக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதோடு, சென்னைக்கும், மாவட்டங்களுக்கும் என விநியோகத்தில் பாகுபாடு இருப்பது ஏற்புடைதல்ல. இதை எதிர்த்து பல்வேறு தொழில் அமைப்புகள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளன' என்கிறார் உறங்கான்படி தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஏ.கே.பி. நவாஸ்பாபு.