நேருநகர் தொடக்கப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரையின் ஓடுகள் திடீர் திடீரென அடிக்கடி சரிந்து விழுவதால், தினமும் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டில் உள்ளது நேருநகர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 96 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு உதவித் தலைமை ஆசிரியர் என 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தொடக்கப் பள்ளி கட்டடத்தின் மேற்கூரை, சீமை ஓடுகளால் போடப்பட்டுள்ளது. தற்போது கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆனதால் கட்டடம் பழுதடைந்துள்ளது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருத்தணி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 லட்சத்தில் 17 ஆயிரம் செலவில் ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
தற்போது மேற்கூரையின் ஓடுகள் ஆங்காங்கே உடைந்து உள்ளன. மழை பெய்தால், மழைநீர் மேற்கூரையில் இருந்து ஒழுகி வகுப்பறை முழுவதும் குளம் போல் தேங்கி விடுகிறது.
இது போன்ற நேரங்களில், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
பள்ளியில் பாடம் நடத்தும்போது ஓடுகள் உடைந்து வகுப்பறைக்குள் விழுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், பள்ளியின் மேற்கூரை அதிகமான இடங்களில் பழுதடைந்து உள்ளதால், எந்த நேரத்திலும் மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழும் அபாய நிலை உள்ளது.
அதேபோல் அதே பள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடிக் கட்டடமும் பழுதடைந்து காணப்படுகிறது. இதில் 3 வயது முதல் 5 வயதுக்குட்பட்ட 19 குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் உள்ளனர்.
இந்த கட்டடத்தின் சுவர்கள் விரசலடைந்தும், சுவரின் கான்கிரீட்டுகள் உடைந்து அடிக்கடி குழந்தைகள் மேல் விழுவதாக அப்பகுதிகள் மக்கள் கூறுகின்றனர்.
எனவே குழந்தைகள், மாணவர்களின் நலன் கருதி நேரு நகர் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையத்தை சீரமைக்க சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


