தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

திருத்தணி, மே 8: பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.  ÷பள்ளிப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:12 am

திருத்தணி, மே 8: பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையை ஆக்கிரமித்து, அமைக்கப்பட்டுள்ள கடைகளால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.

 ÷பள்ளிப்பட்டு பேரூராட்சியில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. பஸ் நிலையத்தில் இருந்து சித்தூர், வேலூர், சோளிங்கர், ஆற்காடு, வேலூர், அரக்கோணம், திருத்தணி, ஆந்திர மாநிலம் பலமேரி, நகரி, புத்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்ல தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிப்பட்டுக்கு வந்து செல்கின்றனர்.

 ÷மேலும் வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகதார நிலையம், அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

 ÷மேற்குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து அத்தியவசியப் பொருள்கள் வாங்க பள்ளிப்பட்டுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

 ÷பள்ளிப்பட்டில் ஆர்.கே.பேட்டை சாலை, நகரி சாலை, பஸ் நிலையச் சாலை ஆகிய இடங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், நாள் முழுவதும் அத்தெருவில் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது.

 ÷இந்நிலையில், அச்சாலை மற்றும் பஸ் நிலையம் ஒட்டியுள்ள பகுதியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து, காய்கறிக் கடை, செல்போன் கடை, பெட்டிக் கடை உள்ளிட்ட பல கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

 ÷அங்கு, காய் உள்ளிட்டவை வாங்க வரும் மக்கள், தங்களது வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால், இட நெருக்கடி ஏற்படுகிறது.

 ÷இதனால், மேற்குறிப்பிட்ட சாலைகளுக்குச் செல்லும் மக்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதை, பேரூராட்சி நிர்வாகத்தினர் கவனத்தில் கொண்டு, சம்மந்தப்பட்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிப்பட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.