திருத்தணி, ஜூன். 20: திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.
திருத்தணியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து வெளியூருக்கு செல்கின்றனர்.
இங்கிருந்து, சென்னை,திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், திருப்பதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு அதிகமானவர்கள் சென்று வருகின்றனர். ஆனால், இத்தனை பேர் வந்து செல்லும் திருத்தணி ரயில் நிலையத்தில் மொத்தம் 3 டிக்கெட் கவுன்ட்டர்களே உள்ளன. இதில் இரண்டு டிக்கெட் கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த கவுன்டர்களில்தான், வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட்டும், ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டும் வழங்கப்படுகின்றன. அதிகாலை 5 முதல் காலை 7.30 வரை மற்றும் மதிய நேரங்களிலும், சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற ஏராளமானோர் வருகின்றனர்.
ஆனால், இரண்டு கவுன்ட்டர்களே உள்ளதால் பெரும்பாலும் பல பயணிகளுக்கு உரிய நேரத்தில் டிக்கெட் வாங்க முடியாமல் போகிறது.
இதுகுறித்து ரயில் பயணி குமார் என்பவர் கூறியது:
திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள 3 டிக்கெட் கவுன்டர்களில் 2 மட்டுமே செயல்படுகின்றன. மூன்றாவது டிக்கெட் கவுன்டர் கடந்த சில ஆண்டுகளாகவே மூடியே உள்ளது. இதனால் அதிகாலையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ஊர்களுக்கு வேலைக்காக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.
திருத்தணி ரயில்நிலையத்தில் மொத்தம் 3 நடைமேடைகள் உள்ளன. இதில், பயணிகள் அமர்வதற்க்கு நாற்காலிகள் போதுமானதாக இல்லை. இதனால் ரயில் வரும் வரை பயணிகள் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார் அவர்.
இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு, திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


