கிராமத்துக்குள் நுழையும் அனைவரும் இந்த மண்டபத்தை பார்த்துச் செல்லும் வகையில், சாலையோரத்தில் 15-க்கு 10 சதுர அடி அளவில் மண்டபத்தைக் கட்டியுள்ளனர். இதற்குள் 5 அடி உயர காந்தி சிலை தனியே பீடத்துடன் மத்தியில் நிறுவப்பட்டுள்ளது. மண்டபத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களிலும் சுபாஷ் சந்திரபோஸ், வ.உ.சி., பகத்சிங் உள்ளிட்ட தலைவர்களது படங்கள் வரையப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேலே சிறிய கம்பம் அமைத்து தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. கூலியில் ஒரு பகுதியை இயன்ற அளவு ஒதுக்கி சேமித்து, இப்போது மண்டபமாக உருமாற்றியுள்ளனர். ஜனவரி மாதத்திலேயே மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.