பிராகாரங்கள் சுமார் 200 அடி நீளம் உடையவையாக உள்ளன. இதில் வடக்குப் பிரகாரத்தில் மூலிகை ஓவியங்கள் இருந்தன. அவை காலப்போக்கில் அழிந்த நிலையில், தற்போது குறிப்பிட்ட சில ஓவியங்கள் மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிராகாரங்களில் உள்ள கல் தூண்கள் பல நூற்றாண்டுகள் ஆனதால், புதுப்பிக்கப்படும் நிலையில் உள்ளன. முதல்கட்டமாக தெற்கு, கிழக்கு மண்டப கல் தூண்களைப் புதுப்பிக்க ரூ. 4 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ரூ. 50 லட்சம் செலவில் பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட கற்கள் மூலம் கலை வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் கோவில் வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.