5 ஆயிரம் மனுக்கள் நிலுவை: 16 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் சுமார் 5000 மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் காவல் நிலையங்களிலும், அதிகாரிகளின் அறைகளிலும் தேங்கிக் கிடக்கின்றன. பெருநகர காவல்துறையில் அதிகபட்சமாக மத்திய குற்றப்பிரிவில் 3 ஆயிரம் மனுக்களும், நான்கு மண்டலங்களில் அதிகபட்சமாக தெற்கு மண்டலத்தில் 1,400 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 900 மனுக்களும் நிலுவையில் உள்ளன. குறைந்தபட்சமாக வடக்கு மண்டலத்தில் 143 மனுக்களும், கிழக்கு மண்டலத்தில் 590 மனுக்களும் நிலுவையில் உள்ளன. 12 காவல் மாவட்டங்களில், அதிகபட்சமாக தியாகராயநகர் காவல் மாவட்டத்தில் மட்டும் 729 மனுக்கள் நிலுவையில் உள்ளன.