அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளதால், கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. புதியக் கட்டடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்டது கார்த்திகேயபுரம் ஊராட்சி. இக்கிராமத்தில் அங்கன்வாடி மையம் இயங்கிவருகிறது. இதில் கார்த்திகேயபுரம் காலனி, அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில் இருந்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த அங்கன்வாடி மையத்தில் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் செலவில் இந்த அங்கன்வாடி கட்டடத்தை திருத்தணி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கட்டிக் கொடுத்தது.
முறையாக பராமரிக்கப்படாததால் கட்டடம் விரிசல் அடைந்துள்ளது. இந்நிலையில் கட்டடம் மேலும் விரிசல் அதிகமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கடந்த 3 மாதங்களாக அங்கன்வாடி மையம், கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ. கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
குழந்தைகளை அலுவலக வளாகத்திலேயே உட்கார வைத்து கல்வி மற்றும் விளையாட்டைக் கற்பிக்க முடியாமல் தினந்தோறும் சத்துணவு அமைப்பாளர் அவதிப்படுகின்றனர். மேலும் குடிநீர், கழிப்பிட போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோல் அங்கன்வாடி மையத்துக்கு மாதந்தோறும் வரும் அரிசி, பருப்பு, எண்ணெய், ஊட்டச்சத்துமாவு உள்ளிட்டவைகளைப் பாதுகாத்து வைக்கவும் இடம் இல்லாமல் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
பழுதடைந்த அங்கன்வாடிக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித்தருமாறு ஒன்றிய நிர்வாகத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை எவ்வித பயனுமில்லை என்கின்றனர் கிராம மக்கள்.
இதுகுறித்து ஒன்றிய அலுவலர் ஒருவர் கூறும்போது: கார்த்தியேகபுரம் கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையக் கட்டடம் பழுதடைந்துள்ளது என்பது உண்மைதான். இந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதியக் கட்டடம் கட்டித்தருமாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்துள்ளார்.
நாங்களும் புதியக் கட்டடம் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கித் தருமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளோம். நிதி ஓதுக்கீடு செய்த பின்பு கார்திகேயபுரம் கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்டி பயன்பாட்டுக்கு விடப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

