மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

சாலை சீரமைப்பு பணிகள் எப்போது?

திருவள்ளூர், ஆக. 9: திருவள்ளூர் நகரில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.  ÷திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளிலும் ரூ.54 கோடி செலவில் பாதாள சாக

News image
Updated On :2 ஜனவரி 2024, 6:26 pm

ப. சுஜித்குமார்

திருவள்ளூர், ஆக. 9: திருவள்ளூர் நகரில் பழுதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

 ÷திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளிலும் ரூ.54 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 ÷இதற்காக நகரின் அனைத்து சாலைகள், தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் நகரின் மையப்பகுதியான ஜே.என். சாலை வழியாகதான் திருப்பதி, திருத்தணி, பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர் போன்ற ஊர்களுக்கு செல்ல முடியும்.

 ÷மேலும் தேரடியில் இருந்து ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள், பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.

 ÷அமைச்சர் ரமணாவின் தீவிர முயற்சியால் ஜே.என். சாலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

 ÷சில இடங்களில் பணிகள் முடிந்து விட்ட நிலையில் அவற்றை உடனே சீரமைத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். குறிப்பாக தீயணைப்பு நிலையம் அருகே சாலை மிகவும் அவல நிலையில் குண்டும், குழியுமாக காணப்புடுகிறது. நெடுஞ்சாலைத் துறை உடனே சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.