திருத்தணி, செப். 4: குடிநீரில் கழிவுநீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் ஸ்டாலின் நகர் வாசிகள் உள்ளனர். கழிவுநீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 14-வது வார்டு சுவால்பேட்டை முதல் தெருவில் கடந்த 3-ஆண்டுகளுக்கு முன் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது. கால்வாய் கட்டப்பட்ட சிறிது நாள்களிலேயே சுவால்பேட்டை பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் செல்போன் டவர் ஒன்று கட்டப்பட்டபோது கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல அப்பகுதியில் இருக்கும் கழிவுநீர் கால்வாயை ஊழியர்கள் உடைத்தனர்.
ஆனால் கழிவுநீர் கால்வாயை மீண்டும் நாங்கள் கட்டித்தருகிறோம் என செல்போன் அதிகாரிகள் உறுதி கூறினர். தற்போது 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் உடைக்கப்பட்ட கால்வாய் இன்னும் சரிசெய்யப்படவில்லை.
இதனால் அவ்வழியாக வரும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. அதேபோல் சுவால்பேட்டை முதல் தெருவில் கைபம்பில் (போரில்) அப்பகுதி மக்கள் குடிநீர் பிடித்துச் செல்கின்றனர். இந்த கைப் பம்பு அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் கைப் பம்பின் அடியில் சிறு ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஓடும் கழிவுநீர் அந்த கைபம்பு ஓட்டையில் கலந்து குடிநீரில் கலக்கிறது.
இதனால் கைப் பம்பில் பிடித்து செல்லும் குடிநீரால் உடல் உபாதகைள் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கழிவுநீர் சாலையில் தேங்கி செல்வதாலும், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதாலும் அப்பகுதி முழுவதும் தூர்நாற்றம் வீசுகிறது. சுவால்பேட்டை முதல் தெருவில் திறந்த வெளியில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை மூடாததால் இருசக்கர வாகனங்களில் வருவோர் சிலர் கால்வாயில் விழுந்து பலத்த காயமடைகின்றனர்.
மேலும் அப்பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்படத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கழிவுநீரில் கால்வாயில் கலப்பதால் எப்போதும் தூர்நாற்றம் வீசுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதே நிலை நீடித்தால் அப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு காலரா, மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் வரக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே இதுகுறித்து திருத்தணி நகராட்சி நிர்வாகம் கைம்பில் ஏற்பட்டுள்ள ஓட்டையை சரி செய்ய வேண்டும் எனவும், கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் சரி செய்ய வேண்டியும், கழிவுநீர் கால்வாய் மேல் சிமென்ட் சிலாபுகளைப் போடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


