இந்தக் கல்லூரிகளில் எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் ஆகிய 3 பாடப் பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ùóசன்னையிலும், பர்கூரிலும் தலா 180 மாணவர்கள், திருநெல்வேலியில் 160 மாணவர்கள் என ஆண்டுதோறும் மொத்தம் 520 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அரசு விதிமுறைப்படி ஆண்டுக்கு ரூ. 7,115 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் இந்தக் கல்லூரிகளில், 50 சதவீத இடங்கள் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பிள்ளைகளுக்கும், எஞ்சிய 50 சதவீத இடங்கள் மற்றவர்களுக்கும் அளிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் சுமார் 110 பேர் பணியாற்றி வருகின்றனர்.