தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திருத்தணி பஸ் நிலையம்!

திருத்தணி, ஜூன் 11: திருத்தணி பஸ் நிலைய இடநெருக்கடியால் குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுநர்கள் தினசரி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  திருத்தணி அண்ணா பஸ் நிலையத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:35 am

திருத்தணி, ஜூன் 11: திருத்தணி பஸ் நிலைய இடநெருக்கடியால் குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் அரசு மற்றும் தனியார் பஸ் ஓட்டுநர்கள் தினசரி கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 திருத்தணி அண்ணா பஸ் நிலையத்துக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. திருத்தணியில் முருகன் கோயில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், வருவாய் கோட்ட ஆட்சியர் அலுவலகம், துணை காவல்துறை கண்காணிப்பு அலுவலகம், வட்டாட்சியர் அலுவகம், தலைமை தபால் அலுவலகம், டி.1 காவல் நிலையம், சார் பதிவாளர் அலுவகம், கிளை சிறைச்சாலை, அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்டவை திருத்தணியில் இயங்கி வருகிறது.

 மேலும் அண்டை மாநிலங்களாகன பாண்டிச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் முருகன் கோயிலுக்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் கார், வேன்களில் வந்து செல்கின்றனர்.

 பல்வேறு பணிகள் காரணமாக மேற்குறிப்பிட்ட அலுவலகங்களுக்கு திருத்தணியை சுற்றியுள்ள பல்வேறு கிராங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திருத்தணி நகருக்கு வந்து செல்ல முக்கிய ஆதாரமாக இருப்பது பஸ்கள் மட்டுமே ஆகும். ஆனால் திருத்தணி பஸ் நிலையமோ இடநெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் பஸ் ஓட்டுநர்கள் பஸ்ûஸ இயக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிலையத்தில் பிளாட்பாரக் கடைகள் வைத்து பஸ் நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரிகள், கடைகள் போட்டு பூ, பழங்களை வைத்து விற்பனை செய்கின்றனர்.

 இது குறித்து பஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது: "2 மணி நேரத்துக்குப் பிறகு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதற்குரிய இடங்களில் (பிளாட்பார்ம்) அப்படியே நிறுத்தப்படுகின்றன.

 இதனால் பஸ் நிறுத்தத்திலிருந்து பஸ்ûஸ பின்புறம் இயக்கி வெளியே எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

 இதுமட்டும் அல்லாமல் ஒழுங்கின்றி நிறுத்தப்பட்டிருக்கும் பஸ்களுக்கு இடைவெளிகளிலும், உதவி காவல் மையம் எதிரிலும் பயணிகளும், பஸ் ஓட்டுநர்களும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பஸ் நிலையமே சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 1, 2 ஆகிய பஸ் நிறுத்தும் இடங்களில் (பிளாட்பார்ம்) இந்த நிலை நீடிக்கிறது.

 சிக்கல் நிறைந்த வழித்தடங்களை முறையாக பிரிப்பது, குறைந்த பஸ்கள் நிறுத்தப்படும் 5, 6-களில் மற்ற பஸ்களை நிறுத்த அனுமதிப்பது, அந்தந்த நேரங்களில் செல்லவேண்டிய பஸ்களை மட்டும் அதற்குரிய இடங்களில் அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் நெரிசலை குறைக்க முடியும். இதுபோன்ற காரணங்களால் பயணிகள் பாதிக்கப்படுவதோடு, குறித்த நேரத்தில் பஸ்களை இயக்க முடியாமல் பஸ் ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்றார் அவர்.

 இது குறித்து நகராட்சி அலுவலர் ஒருவர் கூறும்போது: "திருத்தணியில் இருக்கும் பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு நகல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இது றித்து நடவடிக்கை எடுத்து இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் வேறு இடத்தில் புதிய பஸ் நிலையத்தை அமைத்தால் இதுபோன்ற இடநெருக்கடி ஏற்படாமல் இருக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.