திருத்தணி, ஜூன் 8: திருத்தணி நந்தி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
÷திருத்தணி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் காசிநாதபுரம் கிராமம் அருகே நந்தி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்தது தரைப்பாலம். இப்பாலம் மிகவும் குறுகிய அளவில் இருந்ததால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் மழை காலத்தில் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதும் போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
÷இதையடுத்து உயர்மட்ட மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை துறை ரூ.3- கோடியே 40- லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகள் கடந்த 2009-2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. பிறகு மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தற்காலிகமாக பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. மே மாதத்தில் இருந்து மீண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
÷திருத்தணியில் இருந்து சென்னை, திருவள்ளூர், நாகலாபுரம் ஆகிய ஊர்களுக்கும், திருத்தணி சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் செல்ல இச்சாலையையே வாகன ஓட்டிகள் பயன்படுத்துகின்றனர். உயர்மட்ட மேம்பாலம் அருகே உள்ள சாலையும் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் இரவு நேரங்களில் இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் வந்தபோது பள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ளது.
÷இப்பாலத்தை 15 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை கால அவகாசம் கொடுத்திருந்தது. தற்போது 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
÷இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் திருத்தணி வாழ் மக்களின் கோரிக்கையாகும்.
÷இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


