""தேர்தல் தோல்வியால் துவண்டு போனவர்கள் தலைவர்கள்தானே தவிர, தொண்டர்கள் அல்ல. தலைவர்களுக்கு "இழப்பு' இருக்கலாம். தேர்தல் நேரத்தில் மட்டும் மூன்று முறை சிறிய தொகை பட்டுவாடா செய்யப்பட்டது. அதுமட்டும்தான் கண்ட பலன். இனிமேல் எல்லோரும் ஒன்றுதான்'' என்ற மனநிலை தொண்டர்களிடம் காணப்படுவதே இந்த உற்சாகத்திற்குக் காரணம் என்கிறார் ஒரு நிர்வாகி. கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுவதில் ஆர்வம்காட்டி வரும் கீழ்மட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கொடிக்கம்பங்களைப் புதுப்பித்தல், கட்சிக் கொடிகளை ஏற்றுதல், அன்னதானம் செய்தல், ஏழைகளுக்கு உதவுதல் போன்றவற்றை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.