பண்ருட்டி,டிச. 6: சொந்தக் கட்டடம் இல்லாததால் பண்ருட்டி, சேமக்கோட்டை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி விடுதி மாணவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அவதி அடைந்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், சேமக்கோட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1100-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
நீண்ட தொலைவில் இருந்து வரும் கிராமப்புற மாணவர்களுக்காக கடந்த 15 வருடங்களுக்கு முன் மாணவர் விடுதி ஏற்படுத்தப்பட்டது. சொந்தக் கட்டடம் இல்லாததால் 12 வருடங்களாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த விடுதி, கடந்த 3 வருடங்களாக பள்ளி வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
விடுதிக்காக மூன்று வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டதால் இட வசதியின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். வகுப்பறையில் தங்கியுள்ள விடுதி மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. குளியலறை இல்லாததால் திறந்த வெளியில் குளிக்க நேரிடுகிறது. இது பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இடையூறாக உள்ளது. காலைக் கடனை ஏரிக்கரையில் தான் கழிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் ரீனாமணிவண்ணன் கூறியது:
நீண்ட நாள்களாக வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த விடுதி, மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய விடுதிக் கட்டடம் கட்ட ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார் கோயில் தெரு, பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல இடத்தை தேர்வு செய்தோம். அருகே வசிப்பவர்கள் நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியதால் விடுதி கட்டும் பணி தடைபட்டு வந்தது. வீரன்கோயில் அருகே உள்ள பாதை புறம்போக்கில் இடம் தேர்வு செய்து அதிகாரிகள் பார்த்து சென்றுள்ளனர். ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
தங்கியுள்ள அறை அருகே நீர் நிலை உள்ளதால் கொசு மற்றும் விஷப் பூச்சிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன் இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற ஸ்ரீகாந்த் என்ற மாணவர் நீரில் மூழ்கி இறந்தார். எனவே மாணவர் விடுதி கட்ட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரீனாமணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை


