திருப்பூர்: கோடிக்கணக்கான மதிப்பில் கட்டப்பட்ட திருப்பூர் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் தொடங்க ஆதிதிராவிட தொழில்முனைவோர் முன்வராததை அடுத்து அக் கட்டடங்கள் பயனின்றி கிடக்கின்றன.
ஆதிதிராவிடர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க திருப்பூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் | 10 கோடி செலவில் தாட்கோ தொழில்பேட்டை கடந்த 1994-ல் அமைக்கப்பட்டது. இத் தொழில்பேட்டையில் 100 தொழிற்கூடங்கள் உள்ளன. முழுக்க முழுக்க பின்னலாடை துணி உற்பத்தி (நிட்டிங்) தொழிலுக்கு என அமைக்கப்பட்ட இத் தொழில்பேட்டையில் தொழில் தொடங்க முன்வரும் ஆதிதிராவிடர்களுக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை மானியம் அளிக்கிறது. ஆரம்பத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மட்டுமே இயந்திரங்கள் மீது கடன் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், கடன் பெற்று தொழில் துவங்கிய 54 ஆதி திராவிட தொழில்முனைவோர்களால் தொடர்ந்து சரிவர தொழில் செய்ய முடியாததை அடுத்து அவர்களால் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து, தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் துவங்குவோருக்கு கடன் வழங்குவதை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் நிறுத்திக்கொண்டதை அடுத்து அத் தொழில்முனைவோர் வேறு வங்கிகளில் கடன் பெற்றுக்கொள்ள அரசு அனுமதியளித்தது. இருப்பினும், முதலிபாளையம் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் துவங்க ஆதி திராவிடர்கள் முன்வருவதில்லை. அதற்கு, ஆதிதிராவிட தொழில் முனைவோர்களுக்கு திருப்பூர் தொழில்துறை மத்தியில் போதிய ஒத்துழைப்பு கிடைக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அத் தொழில்பேட்டையில் தொழில் துவங்கிய 54 தொழில்முனைவோர்களில் 27 பேர் தொழிலை விட்டே விலகிவிட்டனர். இப்போது தொழில்புரிபவர்களும் போதிய வருவாய் ஈட்டக்கூடிய அளவில் தொழில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர். பின்னலாடை துணி உற்பத்தி (நிட்டிங்) என்பது ஜாப்ஒர்க் நிறுவனம் என்பதால் ஆடை உற்பத்தியாளர்களை சார்ந்தே இயங்க வேண்டியுள்ளது. தவிர, திருப்பூர் உற்பத்தியாளர்கள் மத்தியில் அவர்களின் உறவினர்கள் மற்றும் நட்பு வட்டங்களில் தொழில்புரியும் நிட்டிங் ஜாப்ஒர்க் நிறுவனத்தினர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு கிடைக்கிறது. தாட்கோ தொழில்பேட்டையில் தொழில்புரியும் ஆதிதிராவிட ஜாப் ஒர்க் நிறுவனர்களுக்கு அத்தகைய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை.
இதுபோன்ற பல காரணங்களாலேயே தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் ஆதிதிராவிட தொழில்முனைவோர்கள் தொழிலைவிட்டு விலகுகின்றனர் என்றார் தாட்கோ தொழில்பேட்டையில் தொழில் துவங்கி பாதிக்கப்பட்ட ஒருவர்.
அதன்படி, தொழில்முனைவோர்கள் தொடர்ந்து விலகுவதாலும், புதிய தொழில்முனைவோர் தொழில் துவங்க முன் வராததை அடுத்தும் தாட்கோ தொழில்பேட்டை கட்டடங்கள் ஆண்டுக்கணக்கில் வீணாகிக் கொண்டுள்ளன. அங்குள்ள தொழிற்கூட கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டும், கோடிக்கணக்கான மதிப்புடைய இயந்திரங்கள் மற்றும் தளவாடப் பொருள்கள் திருடப்படுவதுடன் இரவு நேரங்களில் அக்கட்டடங்கள் சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் திகழ்கிறது. தாட்கோ கட்டடங்கள், இயந்திர தளவாட பொருள்களுக்கு பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழில் நகரில் பாழடைந்து காணப்படும் அக்கட்டடங்களை மாற்றுத் திட்டங்களுக்கு பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


