மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள நிலப்பரப்பில் 95 சதவீத அளவு மாவுப்பூச்சி தாக்கியதால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஏக்கருக்கு 10 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரியின் சான்றின் அடிப்படையில் எவ்வித மேல் விசாரணையும் இல்லாமல் உடனடியாக இந்த இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு இலவசக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். 10 மாத விவசாயம் பாழாகிவிட்டது. பருவ மழை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயப் பணிகளை மேற்கொள்ள, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.