முகாமிற்கு சிறுவனாக வந்து, தற்போது திருமணமாகி, குழந்தைக்கு தந்தையாகிவிட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தது:÷முகாமில் உள்ளவர்களுக்கு திருமணமான பிறகு, தனி வீடு கிடைப்பதில்லை. இதனால் குடியிருப்பின் கடைக்கோடியில், கீழ்பவானி வாய்க்கால் அருகே, சொந்தமாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இதுபோல் சுமார் 25 குடிசைகள் உளளன. இந்த குடிசைகள் அனைத்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள மக்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்டவை. அமைச்சர்கள் அல்லது உயரதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தான் குப்பைகள் அள்ளப்படும். சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படும்.