திருத்தணி, மே 15: திருத்தணி பகுதியில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடப்பு ஆண்டில் வழக்கத்தை விட மிகக் குறைவான மழையே பெய்திருந்தது. சராசரி மழை அளவில் வெகுவாக மழை குறைந்ததால், கிணறுகளில் மற்றும் நீர்நிலைகளில் நீர் வற்றி, மனிதர்களுக்கு குடிக்க குடிநீர் மட்டுமின்றி, விவசாயத்துக்கும் செடி, கொடி மற்றும் மரங்களும் காய்ந்து கிடக்கும் நிலை காணப்படுகிறது.
நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால், பெரும்பாலான ஆழ்துளை கிணறுகள், கை பம்புகளில் தண்ணீர் வற்றத் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் தொடக்கத்திலிருந்தே வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது. அதிலும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
தாழவேடு, தும்பிகுளம், நல்லாட்டூர், சந்தான கோபாலபுரம், பூனிமாங்காடு, கொள்ளகுப்பம், மத்தூர் பகுதி விவசாயிகள் கிணறுகளில் கிடைத்த ஓரளவு தண்ணீரைக் கொண்டு வெங்காயம் பயிர் செய்தனர். டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை செய்தனர். அப்போது 60 கிலோ கொண்ட மூட்டைக்கு ரூ.800 முதல் ரூ.1,200 வரை விலை போனது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். இதைக் கணக்கிட்டு பெரும்பான்மையான விவசாயிகள் குறைந்தளவு வெங்காயத்தை மட்டும் டிசம்பர், ஜனவரியில் விற்பனை செய்தனர்.
தற்போது வெங்காயத்தின் விலை, அறுவடைக் காலத்தை காட்டிலும் மிகவும் குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயி மோகன் கூறியதாவது:
கடந்தாண்டு இதே காலத்தில் மூட்டைக்கு ரூ.1,600 வரை இருந்தது. தற்போது சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளில் இருந்து அதிகளவு வெங்காயம் திருத்தணி பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது.
தற்போது மூட்டைக்கு ரூ.650 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. விலை உயர்வை கணக்கிட்டு வெங்காயத்தைப் பதப்படுத்தியிருந்த விவசாயிகள் கடும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர்.
ஏற்கெனவே ஈரமான வெங்காயத்தைப் பதப்படுத்தும்போது அதன் எடையில் குறைவு ஏற்படும். தற்போது விலையும் குறைந்து போனதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக மோகன் தெரிவிக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


