சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் சிறு, குறுந்தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள பெருந்தொழில்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் கிடைப்பதில்லை. இதைத்தொடர்ந்து இணையதளம் வழியாக இந்தியாவில் உள்ள குறுந்தொழில் நிறுவனங்களை, வெளிநாட்டுத் தொழில்நிறுவனங்கள் தொடர்புகொண்டு வருகின்றன. இந்திய அளவில் கோவை குறுந்தொழில்கூடங்கள் முன்னிலையில் இருப்பதால், இங்குள்ள நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கிறது. பெரும்பாலும் ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் இருந்து கோவை குறுந்தொழில்கூடங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கின்றன.