மேலும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு என 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இது பல ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், இந்த ஒதுக்கீடு அதிகரிக்கவில்லை. இதை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, தனியார் கல்லூரிகளில் 4 சதவீதம் என்பதை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என வலியுறுத்தி, ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாணவர்கள் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி ஆகியோருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.