÷ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையின் புறக்காவல் நிலையம், மருத்துவமனை நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் உள்ள காத்திருப்போர் கூடத்தில் உள்ள ஓர் அறையில் செயல்பட்டு வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஏற்கெனவே இருந்த ஜெ.ராஜேந்திரன் இதைத் திறந்து வைத்து, அங்கு எப்போதும் ஒரு காவலர் பணியில் இருக்குமாறு செய்தார். இக்காவல் நிலையம் ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததால், அங்கு பணிபுரியும் காவலர்களில் யாரேனும் ஒருவர் இங்கு 24 மணி நேரமும் பணியில் இருந்தனர். வயர்லெஸ் கருவி இணைப்புடன் இப் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தது. அரசு