இந்நிலையில், சென்னையில் மேட்டூருக்கு நிலக்கரி அள்ளி அனுப்பும் தனியார் நிறுவனத்துடன் மின்வாரியத்துக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக நிலக்கரி அனுப்புவதில் கடந்த ஒரு மாதமாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தனியார் நிறுவனம், மின்வாரியத்துடனான ஒப்பந்தத்தை முறித்து விட்டது. இதனால் நிலக்கரியை அள்ளி ரயிலில் ஏற்றும் பணிக்காக மேட்டூர் மற்றும் தமிழகத்தின் அனைத்து அனல், நீர் மின் நிலையங்களில் இருந்து வெவ்வேறு பணி நிலைகளில் இருந்த ஊழியர்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டு அங்கு பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.