இதைத் தொடர்ந்து, கடந்த 2007- 08 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் தரகர்கள் மூலம், அந்த நிலங்களுக்குச் சொந்தமான விஜயகோபாலபுரம், நாரணமங்களம் கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம், இடத்துக்கு தகுந்தாற்போல் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 65 ஆயிரம் முதல் ரூ. 3.50 லட்சம் வரை அளிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும், நிலம் அளிக்க மறுத்த 60 விவசாயிகளின் குடும்பத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு, டயர் தொழில்சாலையில் கல்வித் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிப்பதாகவும் கூறினர். இதையடுத்து, விவசாயிகள் தங்களது விளை நிலங்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வந்தனர்.