மேலும், பல்லடம் நகரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதாலும் அந்த எரிஉலையை பண்ணையாளர்கள் பயன்படுத்த முன்வருவதில்லை. பல்லடம், பொங்கலூர் சுற்றுவட்டாரத்திலுள்ள நீர் நிலைகள், விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் பாதிப்பை உணர்ந்து 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள வெங்கிடாபுரம் கோழிக்கழிவு எரிஉலையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பல்லடம் பகுதியிலுள்ள பண்ணைகளில் இருந்து வெளியேறும் அதிகப்படியான கழிவுகளுக்கு ஏற்ப கூடுதலாக எரிஉலைகள் அமைக்கவும் கால்நடைபராமரிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல்லடம் சுற்றுவட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.