2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்தியா, வங்கதேச அணிகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

News image
- படம் | நரேந்திர மோடி (எக்ஸ்)
Updated On :22 ஜூன் 2024, 1:19 pm

DIN

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதிக் கொள்கின்றன. இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வங்கதேசம் சூப்பர் 8 சுற்றில் தோல்வியைத் தழுவியது. இன்றையப் போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு வலுவடையும்.

இந்த நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா மற்றும் வங்கதேசம் இரண்டு நாடுகளும் தங்களுக்குள் கலாசாரங்களை பகிர்ந்து கொள்கின்றன. வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வருபவர்களுக்கு இ-விசா சேவைகள் வழங்கப்படுகின்றன. வடமேற்கு வங்கதேசத்தில் உள்ள மக்களுக்காக புதிய உயர்மட்ட ஆணையம் ஒன்று ரங்க்பூரில் அமைக்கப்பட உள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று விளையாடவுள்ளன. இரு அணிகளுக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஷசீனா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.