2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளிக்கிறது: பில் சால்ட்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளித்துள்ளதாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

News image
பில் சால்ட்- படம் | AP
Updated On :20 ஜூன் 2024, 12:08 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளித்துள்ளதாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி நம்பிக்கையளித்துள்ளதாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தோம். மழையின் காரணமாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. சூப்பர் 8 சுற்றில் விளையாடும் வரை, நாங்கள் முழுமையாக கிரிக்கெட் விளையாடியது போன்று தெரியவில்லை. சரியான நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிடைத்துள்ள வெற்றி எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நம்பிக்கையை அடுத்தடுத்தப் போட்டிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.