2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? யுவராஜ் சிங் பதில்!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

News image
யுவராஜ் சிங் (கோப்புப்படம்)
Updated On :9 ஜூன் 2024, 1:17 pm

DIN

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நியூயார்க்கில் நடைபெறும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எப்போதும் அதிக அளவிலான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். இந்த முறையும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமில்லை.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசியில் அவர் பேசியதாவது: நாம் அனைவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை மிகுந்த உணர்வுபூர்வமாக பார்க்கிறோம் என நினைக்கிறேன். ஏனென்றால், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிறைய வரலாறு இருக்கிறது. பாகிஸ்தான் அணியில் சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருப்பதாக நினைக்கிறேன்.

ரோஹித் சர்மா மற்றும் முகமது அமீர் இடையேயான போட்டி மற்றும் ஷகின் அஃப்ரிடி மற்றும் விராட் கோலி இடையேயான போட்டி எவ்வாறு இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருக்கிறேன். ஆட்டத்தின் சூழ்நிலைகளைப் புரிந்து விளையாடுவது மிகவும் முக்கியம். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாடும் அணி கண்டிப்பாக வெற்றி பெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.